மகாராஷ்டிரத்தில் புதிய உச்சம்: ஒரேநாளில் 25,833 பேருக்கு கரோனா பாதிப்பு; 58 பேர் பலி
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 25,833 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 25,833 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,833 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,96,340ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 58 பலியாகியுள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 53,138ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிலிருந்து இன்று 12,764 குணமடைந்தனர். இதுவரை 21,75,565 பேர் மீண்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1,66,353 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 8,13,211 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் பரவலின் 2-ஆவது அலை தொடங்கிவிட்டது. வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.