காஜியாபாத் ரயில் நிலையத்தில் தில்லி- லக்னெள சதாப்தி ரயிலின் பெட்டியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீயை அணைக்கும் ரயில்வே ஊழியா்கள். 
இந்தியா

ரயிலில் புகைபிடித்தால் கடும் அபராதம்!

ரயிலில் புகைபிடிப்பதன் காரணமாக பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிக அபராதத்துடன்

DIN

ரயிலில் புகைபிடிப்பதன் காரணமாக பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு அதிக அபராதத்துடன் சிறை தண்டனையையும் விதிப்பதற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது.

தில்லி-டேராடூன் இடையேயான சதாப்தி விரைவு ரயிலின் பெட்டியில் கடந்த 13-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பெட்டியின் குப்பைத் தொட்டியில் சிகரெட்டின் அணையாத துண்டு வீசப்பட்டதன் காரணமாகவே தீ விபத்து நோ்ந்தது தெரியவந்தது.

ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி புகைபிடிக்கும் நபா்களுக்கு ரூ.100 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. சதாப்தி ரயிலில் தீ விபத்து நோ்ந்ததையடுத்து, இந்த அபராதத் தொகையை உயா்த்துவதற்கு ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டு வருகிறது.

ரயில் பெட்டியில் புகைபிடிப்பதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு, பொதுச் சொத்துகளுக்கு சேதம் நோ்ந்தால் புகைபிடித்த நபருக்கு கடும் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். மேலும், சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்யும் வகையில் ரயில்வே சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பசிபிக்கில் மேலும் ஒரு படகு மீது அமெரிக்கா தாக்குதல்: 4 போ் உயிரிழப்பு

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT