கரோனாவுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள்: மத்திய அரசு
நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் செய்தியாளர் சந்திப்பில் இதுபற்றி கூறியது:
"நாட்டில் கரோனா தொற்றுக்கு பலியானவர்களில் 88 சதவிகிதத்தினர் 45 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள். இதனால்தான் ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வயதுப் பிரிவில் இறப்பு விகிதம் 2.85 சதவிகிதம்.
Advertisement
மொத்த பாதிப்பில் 3 சதவிகிதத்தினர் மட்டுமே இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் பெரும்பாலானோர் 10 மாவட்டங்களில் மட்டுமே உள்ளனர். இதில் 9 மாவட்டங்கள் மகாராஷ்டிரம், 1 மாவட்டம் கர்நாடகம்.
இரண்டு மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்திருப்பது கவலையளிக்கிறது. முதல் மாவட்டம் மகாராஷ்டிரம். அங்கு 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முதல் 5 மாவட்டங்கள் புணே, நாக்பூர், மும்பை, தாணே மற்றும் நாசிக்.
இரண்டாவது மாநிலம் பஞ்சாப். அங்குள்ள மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டால் அதிகளவிலான கரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது" என்றார் அவர்.
புதிய வகை கரோனா தொற்று குறித்து தேசிய நோய்த் தடுப்பு மையத்தின் இயக்குநர் எஸ்.கே. சிங் கூறுகையில், "18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 771 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.