முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 47 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 275 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:50 PM
பகிர்:

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 47 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு புதிதாக 275 பேர் உயிரிழந்தனர்.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, புதிதாக 47,262 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,17,34,058-ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3,68,457 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 275 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,60,441-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 23,907 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,12,05,160-ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments