இந்தியா

பேஸ்புக்கில் பார்த்த விடியோ போல் செய்து பார்க்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்!

DIN

திருவனந்தபுரம்: பேஸ்புக்கில்  பார்த்த விடியோ போல் செய்து பார்க்க ஆசைப்பட்டகேரள சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:

கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூரைச் சேர்ந்தவர் சிவநாராயணன். ஏழாம் வகுப்பு மாணவர். இவர் தனது ஆன்லைன் வகுப்புகளுக்கு அலைபேசியைப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் செவ்வாயன்று அவர் தனது வீட்டில் இருந்தபோது பேஸ்புக்கில் விடியோ ஒன்றைப்பார்த்துள்ளார். அதில் இளைஞர் ஒருவர் தனது சுருட்டைத் தலைமுடியை  எரிசாராயம் மற்றும் நெருப்பு கொண்டு நேராக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

இதைக்கண்ட சிவநாராயணன் தானும் அதுபோல் செய்து பார்க்க எண்ணி, தனது தலையில் மண்ணெண்ணெய் ஊற்றிக்  கொண்டு, நெருப்புக்குச்சி கொண்டு முடியினை நேராக்க முயன்றுள்ளார். இதன்காரணமாக தலையில் தீ பரவி அவருக்கு கடுமையான் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

அவரது அலறலைக் கேட்ட அக்கம்பக்கத்தார் ஓடிவந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிவநாராயணன் மரணமடைந்தார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT