முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று புதிதாக 1,815 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று புதிதாக 1,815 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:51 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று புதிதாக 1,815 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1815 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 24,274 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 
கரோனாவிலிருந்து இன்று 1,917 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,84,585ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 14 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 4,553ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments