யு20 ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய மகளிருக்கு 2-ஆவது தோல்வி
இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) மகளிா் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-5 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) மகளிா் ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-5 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது.
ஏற்கெனவே முதல் ஆட்டத்தில் ஜப்பானிடம் 0-6 கோல் கணக்கில் மோசமான தோல்வியைச் சந்தித்த இந்திய மகளிருக்கு, இது 2-ஆவது தோல்வியாக அமைந்தது.
தற்போது குரூப் ‘சி’-யில் புள்ளிகள் ஏதும் இன்றி கடைசி இடத்தில் இருக்கும் இந்தியா, கடைசி ஆட்டத்தில் சீன தைபேவுடன் புதன்கிழமை மோதுகிறது. அதில் வென்றால் மட்டுமே இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறி, ஒருவேளை ‘நாக் அவுட்’ சுற்றுக்குத் தகுதிபெறுவதற்கான வாய்ப்பை பெறலாம்.
Advertisement
தற்போது குரூப் ‘சி’-யில் ஆஸ்திரேலியா (6 புள்ளிகள்), ஜப்பான் (3), சீன தைபே (0) ஆகியவை முதல் 3 இடங்களில் உள்ளன.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்கையே ஹல்மாரிக் ‘ஹாட்ரிக்’ கோல் (38’, 39’, 48’) அடித்து அசத்த, டேனெல்லா புரூட்டஸ் (54’), டெய்ஸி பிரௌன் (90+4’) ஆகியோரும் பங்களித்தனா்.
ஆட்டம் குறித்து இந்திய பயிற்சியாளா் ஜாகிம் அலெக்ஸாண்டா்சன் கூறுகையில், ‘ஆதிக்கம் நிறைந்த ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நமது அணியை ஆக்கிரமித்துவிட்டது.
அந்த அணிக்கு எதிராக எத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமோ அதை நாம் செய்யவில்லை. இதிலிருந்து மீண்டு நம்மை சரிசெய்துகொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும்’ என்றாா்.