முகப்பு
இந்தியா

பங்குனி உத்திரத் திருவிழா: அமித் ஷா, ஜெ.பி.நட்டா வாழ்த்து

தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
பகிர்:

தமிழகம் முழுவதுமுள்ள கோயில்களில் இன்று பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தமிழக மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், 

'தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்! இறைவன் முருகன் அருளால் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி செழித்திட இந்த புனித நாளில் எனது அன்பான "பங்குனி உத்திரம்" திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி வேல்! வீர வேல்!' எனப் பதிவிட்டுள்ளார். 

அதேபோன்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, 'தமிழக சகோதர சகோதரிகளுக்கு புனித பண்டிகை பங்குனி உத்திரம் நன்னாளில் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இந்த திருவிழா தெய்வீக திருமணங்களின் புனித பவுர்ணமி. தமிழக மக்கள் எல்லாம் வலமும் பெற்று உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வேல் வேல் வெற்றி வேல்' என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →