கர்நாடகத்தில் புதிதாக 2,975 பேருக்கு கரோனா
கர்நாடகத்தில் புதிதாக 2,975 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கர்நாடகத்தில் புதிதாக 2,975 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் 1,262 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 9,92,779 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9,54,678 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 12,541 பேர் பலியாகியுள்ளனர்.
Advertisement
இன்றைய நிலவரப்படி 25,541 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.