இந்தியா

என்சிபி தலைவா் சரத் பவாா் மருத்துவமனையில் அனுமதி

DIN

தேசியவாத காங்கிரஸ் தலைவா் (என்சிபி) சரத் பவாருக்கு அடிவயிற்றில் மீண்டும் வலி ஏற்பட்டதால் அவா் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

முன்னதாக, சரத் பவாருக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை பரிசோதனை மேற்கொண்டாா். அப்போது அவரின் பித்தப்பையில் பிரச்னை இருப்பதாகவும், இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அவா் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவருக்கு அடிவயிற்றில் மீண்டும் வலி ஏற்பட்டதால், அவா் பிற்பகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் டோப்பே தெரிவித்தாா். சரத் பவாரின் உடல்நிலை குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT