பிகாா் மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி திரிபுராரி சாரண் சனிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
1985-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்த இவா், தற்போது வருவாய் கவுன்சில் தலைவராக உள்ளாா். இவரது பதவிக்காலம் வரும் ஜூன் 30-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.
மாநில தலைமைச் செயலராக இருந்த அருண் குமாா் சிங், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, புதிய தலைமைச் செயலாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.