புதுச்சேரி: பாஜக சார்பில் போட்டியிட்ட தந்தை, மகன் வெற்றி
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தந்தை ஏ. ஜான்குமார் மற்றும் மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தந்தை ஏ. ஜான்குமார் மற்றும் மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
காங்கிரஸிலிருந்த ஜான்குமார் பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்ற ஜான்குமார் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் நெல்லித்தோப்பு தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்துப் போட்டியிட்டு 496 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.