இது மேற்கு வங்கத்தின் வெற்றி: மம்தா பானர்ஜி
சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது மேற்கு வங்கத்தின் வெற்றி என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது மேற்கு வங்கத்தின் வெற்றி என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து மாபெரும் வெற்றியைப் பெறுகிறது.
இதுகுறித்து மம்தா கூறியது:
"பாஜக தேர்தலில் தோல்வியடைந்துள்ளது. பாஜக அழுக்கு நிறைந்த அரசியலைக் கையாண்டது. தேர்தல் ஆணையத்தின் அச்சுறுத்தலை நாங்கள் எதிர்கொண்டோம்.
நந்திகிராம் தொகுதி முடிவைக் குறித்து கவலைகொள்ள வேண்டாம். நந்திகிராம் தொகுதி மக்கள் எந்தத் தீர்ப்பைக் கொடுத்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். கவலைகொள்ள மாட்டேன். நாங்கள் 221-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். பாஜக தோல்வியடைந்துள்ளது.
தேர்தல் வெற்றிப் பேரணியை மேற்கொள்ள வேண்டாம் என கட்சித் தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மாபெரும் வெற்றிக்கு நன்றியுடன் இருப்போம். நான் உடனடியாக கரோனா தொற்றுக்கு எதிராகப் பணியாற்றத் தொடங்க வேண்டும். கரோனா சூழல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாகவே இருக்கும்" என்றார் மம்தா.