இந்தியா

கரோனா பேரிடரை சமாளிக்க ராணுவ உதவி கோரும் தில்லி அரசு

IANS


புது தில்லி: கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான பணிகளை மேற்கொள்ள ராணுவ உதவி தேவைப்படுவதாக மத்திய அரசுக்கு தில்லி அரசு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தில்லியில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 10,000 படுக்கை வசதிகளும், 1000 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளையும் கொண்ட மருத்துவமனைகளை உருவாக்கும் பணியில் ஈடுபடுத்த ராணுவ வீரர்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தில்லியில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக, சுகாதாரத் துறை கடும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், படுக்கை வசதிகளை ஏற்படுத்த ராணுவத்தை அனுப்பினால் மிகவும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார் மணீஷ் சிசோடியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT