ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.
ஜலோர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வயல்வெளியில் உள்ள ஆழ்துளை அருகே அனில் என்ற 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, திடீரென 90 அடி ஆழம் கொண்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முழு வீச்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டது. சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு, தொடர்ந்து 16 மணி நேரத்திற்கும் கூடுதலாக நடந்த மீட்புப் பணியில் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.