இந்தியாவுக்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி ரூ.2.22 கோடி நிதியுதவி
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு கை கொடுக்கும் விதமாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி (இஐபி) 2,50,000 யூரோ (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.22 கோடி) நிதியுதவியை அறிவித்துள்ளது.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு கை கொடுக்கும் விதமாக ஐரோப்பிய முதலீட்டு வங்கி (இஐபி) 2,50,000 யூரோ (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.22 கோடி) நிதியுதவியை அறிவித்துள்ளது.
இதுகுறித்து இஐபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியாவில் கரோனா தொற்று மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இந்தியாவுக்கு ஆதரவளிக்கும் விதமாக இஐபி-யின் சொந்த நிதியத்திலிருந்து 2,50,000 யூரோவை அவசரகால நிதியுதவியாக அளிக்கப்படும் என இஐபி தெரிவித்துள்ளது.