இந்தியா

சோட்டா ராஜன் மீண்டும் திகாா் சிறையில் அடைப்பு

DIN

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாதா சோட்டா ராஜன் செவ்வாய்க்கிழமை மீண்டும் திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலி தீவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது முதல் தில்லியில் உள்ள திகாா் சிறையில் சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி தெரியவந்தது. இதையடுத்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அவா் முழுமையாக குணமடைந்ததையடுத்து செவ்வாய்க்கிழமை மீண்டும் திகாா் சிறையில் அடைக்கப்பட்டதாக மூத்த சிறை அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாறு காணாத உச்சம்.. மகிழ்ச்சியில் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்!

பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் இந்தியாவை உருவாக்குவோம் - சோனியா

மாட்டிறைச்சி தயார் செய்து வையுங்கள்: அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பதில்!

திரைப்படமாகும் கருப்பின நாயகனின் வாழ்க்கை!

எப்படி இருந்திருக்க வேண்டியவர்... பிரபல நடிகருக்கு என்ன ஆனது?

SCROLL FOR NEXT