முகப்பு
இந்தியா

கேரளம்: கடந்த 10 நாள்களில் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா

கேரள மாநிலத்தில் கடந்த பத்து நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 11 மே, 2021 at 1:15 PM
கடந்த 10 நாள்களில் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா
பகிர்:

கேரள மாநிலத்தில் கடந்த பத்து நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் டி.என் சுரேஷ் கூறுகையில், 

மாநிலத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. தற்போது 4.5 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Advertisement

இதில் அதிகபட்சமாகச் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாள்களில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து, பாதிப்பு விகிதம் 27.56 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 65 பேர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு 5,978 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.