முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரத்திலிருந்து தீப்பொறி வெளியேறியதால் பரபரப்பு காணப்பட்டது.

Updated On : 26 ஏப்ரல், 2026 at 12:19 PM
கோப்புப் படம்
பகிர்:

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரத்திலிருந்து தீப்பொறி வெளியேறியதால் பரபரப்பு காணப்பட்டது.

தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரத்திலிருந்து புகை மற்றும் தீப்பொறி வெளியேறியதால் ரயில் நிறுத்தப்பட்டதாக தெற்கு மத்திய ரயில்வே அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

பிரேக் பைண்டிங்(சக்கரம் சுழலாமல் பிரேக் ஜாம் ஆகுதல்) காரணமாக ஏற்பட்ட இந்த சம்பவத்தில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று அவர்கள் கூறினர்.

Advertisement

தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நேற்று ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் S5 பெட்டியில் பிரேக் பைண்டிங் ஏற்பட்டதன் காரணமாக, ஆலேர் ரயில் நிலையத்தில் இரவு 7:47 மணிக்கு நிறுத்தப்பட்டது. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்டியின் சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறி காணப்பட்டதாகவும், அதை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அணைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறகு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.10 மணிக்கு தாம்பரத்தை நோக்கிப் புறப்பட்டது என்றும், இதில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தென் மத்திய ரயில்வே கூறியுள்ளது.

summary

Smoke and sparks emanated from a wheel of a coach of Charminar Express, prompting the train to be halted at a railway station in Yadadri Bhuvanagiri district of Telangana, SCR officials said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.