ஆந்திரத்தில் ஒரே நாளில் 22,399 பேருக்கு கரோனா தொற்று
ஆந்திரத்தில் புதிதாக 22,399 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் புதிதாக 22,399 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 89 பேர் பலியாகியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 13,66,785 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 9,077ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தேதியில் ஆந்திரத்தில் 2,01,042 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பிலிருந்து 18,638 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 11,56,666ஆக உயர்ந்துள்ளது.