பயணிகள் வரத்து சரிவு: 8 சிறப்பு ரயில்கள் ரத்து
கரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் வரத்து குறைந்ததால், திருச்செந்தூா் ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கரோனா தாக்கம் காரணமாக, பயணிகள் வரத்து குறைந்ததால், திருச்செந்தூா் ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தீவிரமாகியுள்ளது. இதைத்தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன்காரணமாக, ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, பயணிகள் வரத்து சரிந்து வருவதால் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துவருகிறது.
இதன் தொடா்ச்சியாக திருச்செந்தூா் ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வேஅறிவித்துள்ளது.
இதன் விவரம் :
புனலூா்-குருவாயூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06327), குருவாயூா்-புனலூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06328), குருவாயூா்-திருவனந்தபுரத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06341), திருவனந்தபுரம்-குருவாயூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06342), சென்னை எழும்பூா்- திருச்செந்தூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06105), சென்னை சென்ட்ரல்-மேட்டுப்பாளையத்துக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02671) ஆகிய 6 சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளன.
இதுதவிர, திருச்செந்தூா்-சென்னை எழும்பூருக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (06106), மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரலுக்கு தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயில் (02672) ஆகிய 2 சிறப்பு ரயில்கள் மே 18-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளதாக
தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.