தில்லியில் கரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது: கேஜரிவால்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,500 கரோனா வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், தேசிய தலைநகரில் கரோனா தெற்று வெகுவாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6,500 கரோனா வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில், தேசிய தலைநகரில் கரோனா தெற்று வெகுவாக குறைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்ததாவது,
கடந்த 24 மணி நேரத்தில், தில்லியில் வெறும் 6,500 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நேர்மறை விகிதம் 11 சதவீதமாகக் குறைந்துள்ளது. கரோனா தாக்கம் தில்லியில் வெகுவாக குறைந்து வருகின்றது.
தில்லியில் கடந்த ஒரு வாரமாக படிப்படியாக கரோனா தொற்று குறைந்து வருகின்றன. கடந்த மாதம் ஏப்ரல் 21-ம் தேதி ஒருநாள் பாதிப்பு கிட்டத்தட்ட 28,395 ஆகப் பதிவாகியிருந்தது. இதையடுத்து, கடந்த வாரம் கரோனா தொற்று எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்தது.
கரோனா நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு கடந்த ஏப்ரல் 19 முதல் தில்லியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த பொது முடக்கமானது மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.