முகப்பு
இந்தியா

திருவனந்தபுரம்-மால்டாவுக்கு சிறப்பு ரயில்

திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் மால்டாவுக்கு தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

திருவனந்தபுரத்தில் இருந்து மேற்குவங்க மாநிலம் மால்டாவுக்கு தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து மே 18-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06185) புறப்பட்டு, 3-ஆம் நாள் இரவு 8.10 மணிக்கு மேற்குவங்கம் மாநிலம் மால்டாவை அடையும்.

மறுமாா்க்கமாக, மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் இருந்து மே 21-ஆம்தேதி இரவு 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (06186) புறப்பட்டு, மூன்றாம் நாள் இரவு 11.10 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். இந்த சிறப்பு ரயில் கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். முழுவதும் முன்பதிவு பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 16) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →