முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி 

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள வனத்தில் 45 வயது பெண் சிறுத்தை தாக்கி பலியாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:15 PM
மத்தியப் பிரதேசத்தில் சிறுத்தை தாக்கி பெண் பலி 
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் உள்ள வனத்தில் 45 வயது பெண் சிறுத்தை தாக்கி பலியாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் கியோலாரி தொகுதியில் உள்ள ரத்தன்பூர் கிராமத்திற்கு அருகே இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நடந்ததாக வன அலுவலர் எஸ்.கே.எஸ் திவாரி தெரிவித்தார்.

கிராமத்திற்கு வெளியே ஒரு காட்டில் டெண்டு இலைகளைப் பறித்துக்கொண்டிருந்தபோது, சிறுத்தை அந்த பெண்ணின் கழுத்தைப் பிடித்து அரை கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்றது, 

Advertisement

அந்தப் பெண் கத்தியுள்ளார். பின்னர், அவரது கணவரும், கிராமவாசிகளும் அங்கு விரைந்தனர், ஆனால் பெண்ணின் இரத்தக்கறை படிந்த மொபைல் போனை மட்டுமே அந்த இடத்தில் மீட்க முடிந்தது. 

பின்னர் அருகிலுள்ள ஒரு மலையடிவாரத்தில் உடலைக் கண்டதாக அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments