கோவா சிறையில் கரோனாவுக்கு கைதி பலி
கோவாவின் கொல்வலே சிறையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கோவாவின் கொல்வலே சிறையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யெல்லப்பா கர்பால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, கைதிகளுக்காக நியமிக்கப்பட்ட சிறப்புச் செல்லில் வைக்கப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் திடீரென மயக்கமடைந்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.
Advertisement
பின்னர், அந்த கைதியை மாபுசா நகரில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார் என்று அதிகாரி கூறினார்.