முகப்பு
இந்தியா

'டவ்-தே' புயலால் கடும் சேதங்கள்: 6 மாநிலங்களில் 101 மீட்புக் குழுக்கள்

கரையைக் கடந்த ‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் மொத்தம் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 18 மே, 2021 at 1:22 PM
டவ்-தே புயல்: 6 மாநிலங்களில் 101 மீட்புக் குழுக்கள் குவிப்பு
பகிர்:


கரையைக் கடந்த ‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களில் மொத்தம் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் குவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக குஜராத்தில் ஏற்பட்ட சேதங்களால் 21 மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குஜராத்தில் மட்டும் இதுவரை 1.5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அரபிக் கடலில் உருவான ‘டவ்-தே’ புயல் அதிதீவிரப் புயலாக குஜராத்தில் திங்கள்கிழமை (மே 17) இரவு கரையைக் கடந்தது.

Advertisement

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகிய டவ்-தே, அதிதீவிர புயலாக மாறியது. புயல் காரணமாக கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களிலும் டாமன்-டையு மற்றும் தாத்ரா-நாகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் கனமழையும் பலத்த காற்றும் வீசியது.

இதனால் கடற்கரையோர பகுதிகளில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் யூனியன் பிரதேசமான கோவாவிலும் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

கோவாவில் சேதமடைந்துள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்களை சீர் செய்யும் பணிகளிலும் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது.

டாமன்-டையு பகுதியில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் மீட்புப் படை உதவி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.