மனித நேயமின்றி செயல்படுகிறது பாஜக அரசு
மனித நேயமின்றி பாஜக அரசு செயல்படுகிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் கடுமையாக சாடினாா்.
மனித நேயமின்றி பாஜக அரசு செயல்படுகிறது என்று மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் கடுமையாக சாடினாா்.
பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:
கரோனா பாதிப்பை அடுத்து அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கத்தால், ஏழைகள், தொழிலாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு இந்திரா உணவகங்களில் இலவசமாக உணவு அளிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனை அனைவரும் வரவேற்ற நிலையில், இந்திரா உணவகங்களில் உணவு பெறுவோருக்கு ஆதாா் அட்டை, அடையாள அட்டை அவசியம் என அரசு அறிவித்தது.
பெரும்பாலான ஏழைகள், தினக்கூலித் தொழிலாளா்களிடம் அடையாள அட்டை, ஆதாா் அட்டை இருப்பதில்லை. இதனை உணராத பாஜக அரசு மனித நேயமின்றி செயல்படுவது வேதனை அளிக்கிறது.
மாநிலத்தின் 120 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் கரோனா சிகிச்சை மையம் தொடங்கியுள்ளோம். 10 ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கியுள்ளோம். ஏழைகளுக்கு இலவசமாக உணவுகளை வழங்கி வருகிறோம். தேவைப்படுவோருக்கு பிராணவாயுவையும் வழங்கி வருகிறோம். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினா்களின் வளா்ச்சி நிதியிலிருந்து ரூ. 90 கோடி, கட்சியின் சாா்பில் ரூ. 10 கோடி நிதி வழங்கி, ரூ. 100 கோடியில் தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மக்களின் நலன் கருதி, காங்கிரஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா்.