கேரளத்தில் புதிதாக 28,514 பேருக்கு கரோனா
கேரளத்தில் இன்று ஒரேநாளில் 28,514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளத்தில் இன்று ஒரேநாளில் 28,514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,514 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 176 பேர் பலியானார்கள்.
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7170ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,89,283 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 45,400 பேர் குணமடைந்தனர்.
இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 20,25,319ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.