கொல்கத்தாவில் கருப்பு பூஞ்சைக்கு பெண் பலி
கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுகதாரத்துறை அதிகாரி தெரிவித்ததாவது,
ஹரிதேவ்பூரில் வசிக்கும் 32 வயது பெண் ஷாம்பா சக்ரவர்த்தி கரோனா பாதிக்கப்பட்ட நிலையில் சம்பூநாத் பண்டிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், அவர் கருப்பு பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
Advertisement
கருப்பு பூஞ்சை வழக்குகளைச் சமாளிக்கச் சுகாதாரத் துறை நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. தற்போது, மாநிலத்தில் ஐந்து பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் அண்டை நாடான பிகார் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து வந்தவர்கள். அவர்களின் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றார்.