முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 26,672 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 26,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 26,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,672 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,79,897ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவுக்கு இன்று மேலும் 594 பேர் பலியானார்கள். 

இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 88,620ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,48,395 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 29,177 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 51,40,272ஆக உயர்ந்துள்ளது. 

26,96,306 பேர் வீடுகளிலும், 21,771 பேர் நிறுவனங்களிலும் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.