மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 26,672 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 26,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 26,672 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,672 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,79,897ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 594 பேர் பலியானார்கள்.
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 88,620ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 3,48,395 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 29,177 பேர் மீண்டனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 51,40,272ஆக உயர்ந்துள்ளது.
26,96,306 பேர் வீடுகளிலும், 21,771 பேர் நிறுவனங்களிலும் கண்காணிப்பில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.