மகாராஷ்டிரத்தில் புதிதாக 22 ஆயிரம் பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 22,122 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 22,122 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 22,122 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,02,019 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 42,320 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 51,82,592 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் 361 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 89,212 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி அங்கு 3,27,580 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.