18-44 வயதினர் 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: மத்திய அரசு
18-44 வயதினரில் இதுவரை 1.06 கோடி பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
18-44 வயதினரில் இதுவரை 1.06 கோடி பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
ஒட்டுமொத்தமாக இதுவரை 19.60 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியது:
"கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு குறைந்து வருகிறது. மே 3-ம் தேதி 81.7 சதவிகிதமாக இருந்த குணமடைவோர் விகிதம் இன்று 88.7 சதவிகிதமாக உள்ளது.
கடந்த 11 மாநிலங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கைகளைக் காட்டிலும் குணமடைவோர் எண்ணிக்கைகளே அதிகமாக இருந்து வருகிறது.
கடந்த 22 நாள்களாக நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மற்றொரு நற்செய்தி இந்த வாரத்துக்கான நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.09 சதவிகிதம். இதுவும் குறைந்து வருகிறது" என்றார் லவ் அகர்வால்.