லக்னௌ: கரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு இலவசக் கல்வி வழங்க உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மாவுடன், தனியார் பள்ளிகள் சங்கம் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளிடமிருந்து ஒரு பைசாவும் கட்டணமாகப் பெறப்படாது என்றும், பாடப் புத்தகம், நோட்டு மற்றும் சீருடை ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.