கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துசேர்ந்தன: சுகாதாரத்துறை
கா்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.
கா்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில்,
கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி குப்பிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
இரண்டு கோடி கோவிஷீல்ட் மற்றும் ஒரு கோடி கோவாக்சின் அடங்கிய 3 கோடி தடுப்பூசிகளை மாநில அரசு இதுவரை வழங்கியுள்ளது. மேலும், இரண்டு கோடி தடுப்பூசிகளுக்கு உலகளாவிய டெண்டர் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.
மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முன்னணி தொழிலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்கள பணியாளர்களைத் தவிர 18 முதல் 44 வரை தடுப்பூசி போடும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிக கரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.