பயணிகள் வருகை குறைவு: 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே 
இந்தியா

பயணிகள் வருகை குறைவு: 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

பயணிகள் வருகை குறைவாகக் காணப்பட்டதால் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

DIN

பயணிகள் வருகை குறைவாகக் காணப்பட்டதால் 12 சிறப்பு ரயில்களை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தற்போது தீவிரமாகி வருகிறது. இதைத் தடுக்க மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன்காரணமாக, சிறப்பு ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையடுத்து, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிா்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துவருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னை சென்ட்ரல் -  மங்களூர் உள்ளிட்ட 12 சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை சென்ட்ரல்-மங்களூர் சிறப்பு ரயில்(06627), கேஎஸார் பெங்களூரு-எர்ணாகுளம் சிறப்பு ரயில்(02677), மதுரை-திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06344) உள்ளிட்ட 12 ரயில்கள் ஜூன் 1 முதல் 16ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலய்யாவின் 111 ஆவது படத்தில் இணைந்தார் நயன்தாரா!

“பெங்களூருவை விட்டு வெளியேறுங்கள்”... ரூ. 50 கோடி வரையிலான சலுகைகளுடன்.!

சென்னையை நோக்கி நகரும் மேகக் கூட்டங்கள்! மழைக்கு வாய்ப்பு!

வாக்குச்சாவடி அலுவலர்களே திணறுகிறார்கள்; அசாமுக்கு மட்டும் சலுகை ஏன்? - என்.ஆர். இளங்கோ

தில்லியில் 2 பள்ளிகள், 3 நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT