முகப்பு
இந்தியா

உ.பி.யில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
உ.பி.யில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலி
பகிர்:

உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லோதா போலீஸ் வட்டத்தில் உள்ள கர்சுவா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பலியானவர்கள் வியாழக்கிழமை இரவு உள்ளூர் விற்பனையாளரிடமிருந்து  மதுபானம் வாங்கி உட்கொண்டனர். இறந்தவர்களில் இருவர் ஓட்டுநர்கள் ஆவார். 

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகத் தேசியப் பாதுகாப்பு சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

Advertisement

சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மதுபான கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அலிகார் மாவட்ட நீதிபதி சந்திர பூஷன் சிங் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments