இந்தியா

பாகிஸ்தான் சாலை விபத்தில் 11 பேர் பலி

PTI


இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் பகுதியான முஸாபராபாத் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில், 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். 13 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை காலை, ராவல்பிண்டியிலிருந்து சகோதி பகுதியை நோக்கி இந்த வேன் சென்று கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளாக, சாலையோரமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், வேனிலிருந்த 3 குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகினர். இந்த விபத்து எவ்வாறு நேரிட்டது என்பது குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

SCROLL FOR NEXT