இந்தியா

மேற்கு வங்க நலனுக்காக மோடியின் பாதங்களைத் தொடத் தயார்: மம்தா

DIN


மேற்கு வங்கத்தின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கச் சொன்னால்கூட அதற்குத் தயார் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க தலைமைச் செயலரை மத்திய அரசு திரும்பப் பெற்றது, புயல் பாதிப்புகள் குறித்த பிரதமர் மோடியின் ஆய்வுக் கூட்டத்தைப் புறக்கணித்தது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மம்தா கூறியது:

"மேற்கு வங்கத்தில் பாஜகவின் தோல்வியை ஜீரணிக்க முடியாததால் மோடியும், அமித் ஷாவும் முதல் நாளிலிருந்தே எங்களுக்குப் பிரச்னையை உண்டாக்கத் தொடங்கிவிட்டார்கள்.

மேற்கு வங்கத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மோடியின் பாதங்களைத் தொட்டு வணங்கச் சொன்னால்கூட அதற்குத் தயார்.  

தலைமைச் செயலரின் தவறு என்ன? கரோனா நெருக்கடிக்கு மத்தியில் தலைமைச் செயலரைத் திரும்பப் பெறுவது மத்திய அரசு அரசியல் செய்வதையே வெளிப்படுத்துகிறது. 

புயல் பாதிப்புகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மற்றும் பிரதமருக்கிடையே நடைபெற வேண்டியது. அந்த அமர்வில் பாஜக தலைவர்கள் அழைக்கப்பட்டது ஏன்? ஆனால், குஜராத், ஒடிசாவில் இதுபோன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு இல்லை" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT