உ.பி.யின் பாஜக எல்எம்ஏ தேவேந்திர பிரதாப் சிங் மாரடைப்பால் மரணம்
உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ தேவேந்திர பிரதாப் சிங் மாரடைப்பால் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
உத்தரப் பிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ தேவேந்திர பிரதாப் சிங் மாரடைப்பால் திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.
அவருக்கு வயது 55. அமபூரைச் சேர்ந்த எம்எல்ஏ மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனையின் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.
அமபூர் எம்.எல்.ஏ.வின் மறைவுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
Advertisement
அமபூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஹாஜிபூர் கிராமத்தில் வசிக்கும் சிங், மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
சிங் மரணம் குறித்த தகவலின் பேரில், உள்ளூர் பாஜக எம்எல்ஏ விபின் வர்மா டேவிட், மர்ஹாரா எம்எல்ஏ வீரேந்திர லோதி உள்பட ஏராளமான பாஜக தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
எம்.எல்.ஏ.வின் உடலை தனது கிராமத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.