இந்தியா

புது தில்லியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து

DIN


புது தில்லி: புது தில்லியில் உள்ள ஷாஜகான் சாலையில் அமைந்துள்ள அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பில், தூர்தர்ஷன் இயக்குநரின் வீட்டுப் பணியாளர்கள் தங்கியிருந்த வீட்டில் தீ விபத்து நேரிட்டது.

தீ விபத்து குறித்து அதிகாலை 2 மணிக்கு தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. உடனடியாக விரைந்துச் சென்ற தீயணைப்புத் துறையினர், வீட்டில் சிக்கியிருந்த 6 பேரை மீட்டனர். 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துச் சென்ற தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில், தூர்தர்ஷன் இயக்குநர் மகேந்திரன் சிங் வீட்டில் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்த பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT