உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் உள்ள புகழ்பெற்ற சிவன் கோயிலில் பிரார்த்தனை செய்வதற்கும், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சமாதியை திறந்து வைப்பதற்காகவும் பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் டேராடூன் விமான நிலைய வந்தார். அவரை உத்தரகண்ட் ஆளுநர் குர்மித் சிங் மற்றும் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் வரவேற்றனர்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து வணங்கினார்.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்மட்டம் 113.59 அடியாக உயர்வு
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்து வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி.
பின்னர் கேதார்நாத் கோயிலில் ஆரத்தி செய்து சிவபெருமானை வழிபாடு செய்தார். பிரார்த்தனைக்குப் பிறகு கேதார்நாத் கோயிலை மோடி வலம் வந்தார்.
கேதார்நாத் சிவன் கோயில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி.
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கேதார்நாத் சிவன் கோயில்.
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்து வைத்த மோடி, 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட உத்தரகண்ட் வெள்ள பாதிப்புக்குப் பின்னர் சமாதி புனரமைக்கப்பட் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் சமாதியை திறந்து வைத்தார்.