இந்தியா

தில்லியில் காற்று மாசு: ஒரு வாரத்திற்கு மூடப்படும் பள்ளிகள்

DIN

தில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசு காரணமாக பள்ளிகள் ஒருவார காலத்திற்கு மூடப்பட்டு இணைய வழியில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பயிா்க்கழிவுகள் எரிப்பு நிகழ்வுகள் காரணமாக, காற்றின் தரக் குறியீடு 471 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.

ஃபரீதாபாத் (460), காஜியாபாத் (486), கிரேட்டா் நொய்டா (478), குருகிராம் (448), நொய்டா (488) ஆகிய நகரங்களில் உள்ளிட்ட தில்லியின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுப்படுத்தமுடியாத காற்று மாசின் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. திங்கள்கிழமை (நவ.15) முதல் ஒரு வார காலத்திற்கு பள்ளிகள் மூடப்படுவதாக தில்லி அரசு தெரிவித்துள்ளது. 

இருப்பினும் வகுப்புகள் இணையவழியில் நடைபெறும் எனவும் பள்ளிக் குழந்தைகள் அசுத்தமான காற்றை சுவாசிப்பதைத் தடுக்கவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் அலுவலங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT