இந்தியா

எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது: வெங்கைய நாயுடு

DIN

மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும், திரிணமூல், சிவசேனை கட்சிகளைச் சோ்ந்த தலா இரு எம்.பி.க்களும், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.யும் மாநிலங்களவையிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களை தொடங்கியவுடன் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “12 எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யக்கோரி உங்கள் அலுவலகத்துக்கு வந்தோம். இந்த சம்பவம் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் நடந்தது. அதற்கு இப்போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்”.

இதற்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு, “கடந்த மழைக்கால அமர்வின் கசப்பான அனுபவம் இன்னும் நம்மில் பெரும்பாலோரை ஆட்டிப்படைக்கிறது. ஆகையால், இடைநீக்கத்தை திரும்பப் பெற இயலாது” என்றார்.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மக்களவையின் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனை உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இரு அவைகளிலிருந்தும் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT