இந்தியாவில் இதுவரை 89.02 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 64,40,451 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 89,02,08,007 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 36,05,69,116 இரண்டாம் தவணை - 8,30,27,778 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,95,61,641 இரண்டாம் தவணை - 7,68,32,812 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 10,13,72,713 இரண்டாம் தவணை - 5,62,16,918 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,72,796 இரண்டாம் தவணை - 88,95,117 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,52,779 இரண்டாம் தவணை - 1,50,06,337 |
மொத்தம் | 89,02,08,007 |