நாயை அடித்துக்கொன்ற 2 சுகாதாரப் பணியாளர்கள்: நகராட்சி எடுத்த நடவடிக்கை
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் நாயை அடித்து துன்புறுத்திக் கொன்ற இரு சுகாதாரப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாநாயை அடித்துக்கொன்ற 2 சுகாதாரப் பணியாளர்கள்: நகராட்சி எடுத்த நடவடிக்கை
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் நாயை அடித்து துன்புறுத்திக் கொன்ற இரு சுகாதாரப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் பகுதியில் நாயை அடித்து துன்புறுத்திக் கொன்ற இரு சுகாதாரப் பணியாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்திலுள்ள கடேகான் பகுதியில் தங்களைப் பார்த்து குரைத்த நாயை சுகாதாரப் பணியாளர்கள் இருவர் கயிறு கட்டி அடித்து துன்புறித்தியுள்ளனர். இதில் நாய் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது.
இது தொடர்பாக விடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில் இதனைக் கண்ட நகராட்சி நிர்வாகம் நாயைக் கொன்ற இருவரை அழைத்து எச்சரித்தது.
இதனிடையே பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அனைவரும் சுகாதாரப் பணியாளர்களின் இந்த செயலுக்கு எதிராக களமிறங்கினர்.
இதன்விளைவாக ஊழியர்கள் இருவரையும் நகராட்சி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
இது குறித்து பேசிய மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூர்யகாந்த் ஷர்மா, விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.