இந்தியா

மைசூரு தசரா கொண்டாட்டம்: கலைஞர்களுக்கு நிபந்தனைகள் என்னென்ன?

DIN

கரோனா பெருந்தொற்றுக்கிடையே தசரா கொண்டாடப்படுவதால் நாடக கலைஞர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கர்நாடக அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.

தசரா பண்டிகை வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. கரோனா பரவலுக்கு இடையே பல்வேறு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 

மைசூருவில் கொண்டாடப்படும் தசரா பண்டிகை உலக பிரசித்தி பெற்றது. இதனால் அதில் பங்கேற்பவர்களுக்கு கர்நாடக அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இது தொடர்பாக அம்மாநில தலைமைச் செயலாளர் பி. ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

மைசூரு தசராவில் விழாவில் பங்கேற்கும் அரசு அதிகாரிகள், பணியில் உள்ள அலுவலர்கள், கலைஞர்கள், பாதுகாப்பாளர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம்.

அக்டோபர் 4-ம் தேதிக்கு பிறகு எடுத்த பரிசோதனை சான்றிதழ் வைத்திருப்பது அவசியம். விழாவில் பங்கேற்கும் கலைஞர்களுக்கு கரோனா பரிசோதனையில் முன்னுரிமை வழங்கப்படும்.

9 நாள்களுக்கு விழா நடைபெறும் என்ராலும், கரோனாவால் தசரா பண்டிகைக்கு அதிக அளவிலான மக்களுக்கு அனுமதி இல்லை என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவிற்கு அழைப்பு விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT