இந்தியா

ஹைதராபாத் விமான நிலையத்தில் 1.2 கிலோ தங்கம் பறிமுதல்

DIN

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சூடானிலிருந்து கடத்திவரப்பட்ட 1.2 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சூடானிலிருந்து துபை வழியாக ராஜீவ் காந்தி விமான நிலையத்திற்கு நேற்று(அக்-6) வந்த பெண் பயணியை பரிசோதனை செய்தபோது உள்ளாடையில்  1.2 கிலோ  தங்கத்தை மறைத்து  கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பெண்ணை கைது செய்ததோடு அவரிடமிருந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.58 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உள்ளாடையில் வைத்து 3 பேர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT