கோப்புப்படம் 
இந்தியா

தடுப்பூசி போடாத ஊழியர்கள் அலுவலகம் வர அனுமதி இல்லை: தில்லி அரசு

கரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அலுவலகம் வர அனுமதி இல்லை என தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ANI

கரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அலுவலகம் வர அனுமதி இல்லை என தில்லி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா நோய்த் தொற்றை தடுக்க தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் அலுவலகம் வர தடுப்பூசியை கட்டாயப்படுத்தி தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி அரசு வெளியிட்ட செய்தியில்,

"அரசு அலுவலகப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், கல்வி நிறுவனத்தின் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு ஊழியர்களும் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் குறைந்தது முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும்.

மேலும், கரோனா தடுப்பூசி செலுத்தப்படாத அரசு ஊழியர்கள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் அலுவலகம் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள். முதல் தவணை தடுப்பூசி செலுத்தும் வரை ஊழியர்களின் வருகைப் பதிவு விடுமுறையாக கருதப்படும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆற்காடு: கன்டெய்னர் லாரி - சொகுசு பேருந்து மோதி விபத்து! ஒருவர் பலி; 23 பேர் படுகாயம்

தென் மாவட்டங்களிலிருந்து சென்னை திரும்புவோர் கவனத்துக்கு... முன்பதிவில்லா சிறப்பு ரயில்!

கரூர் பலி! உச்ச நீதிமன்றம் செல்ல விஜய் முடிவு?

சொல்லப் போனால்... ஒரு ஹீரோ, 23 ஆம் புலிகேசியான கதை!

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT