லக்கிம்பூர் வன்முறை: மத்திய அமைச்சர் மகன் விரைவில் கைது?
லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
லக்கிம்பூர் வன்முறை வழக்கில் முக்கியக் குற்றவாளியான மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கைது நடவடிக்கை குறித்து காவல் துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | நாட்டில் 94.62 கோடி பேருக்கு தடுப்பூசி: மத்திய அரசு
Advertisement
விசாரணையின்போது வன்முறை குறித்த ஆஷிஷ் மிஸ்ராவின் வாக்குமூலம் நம்பும்படியாக இல்லையென்பதால் மேற்கொண்டு பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய மாவட்டக் காவல் துறையை சிறப்புப் புலனாய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, லக்கிம்பூர் வன்முறை வழக்கில் உத்தரப் பிரதேச காவல் துறையால் அமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு ஆஜரானார் ஆஷிஸ் மிஸ்ரா. டிஐஜி உபேந்திர அகர்வால் தலைமையிலான 6 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு சனிக்கிழமை மாலை வரை ஆஷிஸ் மிஸ்ராவிடம் விசாரணை மேற்கொண்டது.