மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூர் மாநிலம், ஹிங்கோஜங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் நேற்று முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இன்று காலை திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இருத்தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் யங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ‘குக்கி’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.