மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூரில் பயங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மணிப்பூர் மாநிலம், ஹிங்கோஜங் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் நேற்று முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க- பவர் பிளேவில் மிரட்டல்: டெல்லிக்குப் பிரித்வி; சென்னைக்கு ஹேசில்வுட்
Advertisement
இந்த நிலையில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இன்று காலை திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து இருத்தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் யங்கரவாதிகள் 4 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் ‘குக்கி’ என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.